Latest
நடிகர் அஜித்குமாருக்கு காலில் காயம்; சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதி

சென்னை, ஏப் 30-புதுடில்லியில் இந்திய அதிபர் துரோபதி முர்மு வழங்கிய பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டு நேற்று சென்னை திரும்பிய நடிகர் அஜித் குமாரை வரவேற்க விமான நிலையத்தில் அதிக அளவில் ரசிகர்கள் திரண்டனர்.
அவர் தனது கார் இருக்கும் இடத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுப்பதற்கு முயன்றனர்.
அப்போது நெரிசல் மற்றும் தள்ளு முள்ளினால் அஜித் குமார் காலில் காயம் அடைந்தததால் பிசியோதெரபி சிகிச்சைக்காக அவர் இன்று காலை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.