Latestமலேசியா

வெள்ள நிலைமையை பார்வையிட அன்வார் நாளை கிளந்தான் வருகை

கோலாலம்பூர், டிச 27- வெள்ள நிலைமையை பார்வையிடுவதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை கிளந்தானுக்கு வருகை மேகொள்வார். வெள்ள மீட்பு நடவடிக்கைகள் மற்றும் வெள்ள அகதிகளுக்கான உதவிகள் குறித்து நட்மா ‘Nadma’ வழங்கும் விளக்கக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்வார்.

இவ்வாண்டு கிளந்தான் மாநிலம் வெள்ளத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் 17,466 பேர் நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்பு குறித்த மதிப்பீட்டையும் அறிந்து கொள்ளவிருப்பதாக அவர் கூறினார். கிளந்தான் வெள்ள நிலைமை கவலையளிக்கும் வகையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!