Latestமலேசியா

நாளை முதல் ஞாயிறு வரை கூட்டரசு பிரதேச தினம் டத்தாரான் புத்ரா ஜெயாவில் அனுசரிக்கப்படும்

கோலாலம்பூர், ஜன 31 – இவ்வாண்டிற்கான கூட்டரசு பிரதேச தினம், புத்ரா ஜெயா திறந்த நாளுடன் இணைந்து டத்தாரான் புத்ரா ஜெயாவில் நாளை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை கொண்டாடப்படும் என கூட்டரசு பிரதேச பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸாலிஹா முஸ்தாபா தெரிவித்தார்

பொது மக்கள் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கு ஏதுவாக ஒரே நிகழ்வில் அனைத்து அரசு துறைகளையும் ஒன்றுசேர்க்கும் நோக்கில் புத்ரா ஜெயா கழகம் மற்றும் புத்ரா ஜெயா இலாகா ஆகிய துறைகளின் கூட்டு முயற்சியில் இந்த நிகழ்வு நடத்தப்படுவதாக அவர் கூறினார்.

மூன்றாவது ஆண்டாக நடத்தப்படும் இந்த நிகழ்வு 2024ஆம் ஆண்டு கூட்டரசு தினம், கூட்டரசு பிரதேசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவு, மற்றும் கூட்டரசு பிரதேசக் கழகம் உருவாக்கம் கண்டு 28 ஆண்டுகள் நிறைவு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

புத்ரா ஜெயா கழகம் மட்டுமின்றி, அனைத்து அமைச்சுகள், அரசு துறைகள், அரசு நிறுவனங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள், பொது நிறுவனங்கள் மற்றும் சொத்துடைமைத் துறைகளும் இதில் பங்கேற்கவுள்ளன என்று அவர் தெரிவித்தார். இவ்விரு நிகழ்வுகளையொட்டி 61 நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!