கோலாலம்பூர், மார்ச் 25- வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் Nga Kor Ming கிற்கு எதிராக மார்ச் 7ஆம் தேதி அனாமதேய மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 11 நபர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அந்த தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரின் அண்டை வீட்டுக்காரர்கள் மற்றும் அவரது அணுக்கமான குடும்ப உறுப்பினர்களும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என பேரா போலீஸ் தலைவர் Yusri Hassan Basri கூறினார். அவரது குடும்ப இல்லத்திற்கு அருகேயுள்ள பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மேற்குக் கரை நெடுஞ்சாலை வட்டாரத்திலுள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளியையும் தாங்கள் பரிசோதித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகவல் அறிந்தவர்கள் எவராவது இருந்தால் தகவல் வழங்கி போலீசிற்கு உதவும்படி இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Yusri கேட்டுக்கொண்டார்.
Nga வுக்கு எதிரான எழுதப்பட்ட மிரட்டல் செய்தி பல காகிதங்களில் சுருட்டப்பட்டு, மார்ச் 7 ஆம் தேதி, Manjung கிற்கு அருகே Ayer Tawar ரில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு வெளியே வீசப்பட்டது.