கர்நாடக, பிப் 4 – காலை உணவு சமைத்துக் கொடுக்க மறுத்ததால், மகன் இரும்புக் கம்பியால் அடித்து தனது தாயைக் கொன்ற சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில், சிறுவன் ஒருவன் காவல் நிலையத்திற்கு வந்து ‘நான் எனது அம்மாவை கொலை செய்து விட்டேன்’ என கூறியுள்ளான்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த சிறுவனின் தாயார் உடலை மீட்டனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக அந்த சிறுவனிடம் விசாரணை நடத்திய போது, காலை உணவை வழங்குமாறு தனது தாயிடம் கேட்ட போது, அதற்கு அவர் மறுத்து, ‘நீ எனது மகன் அல்ல’ என்று கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே, அருகில் இருந்த இரும்பு கம்பியால் அந்த சிறுவன் அம்மாவின் தலையில் அடித்ததாக வாக்கு மூலம் வழங்கியுள்ளான்.
பெற்ற மகனே தனது தாயை கொன்ற இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக போலீசார் மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.