
கோலாலம்பூர், ஏப் 28 – நாடு தழுவிய நிலையில் நேற்று ம.இ.காவின் தேசிய இளைஞர் பிரிவும் அதன் கல்வி பிரிவும் ஏற்பாடு செய்திருந்த உயர்க் கல்வி லட்சியப் பயணக் கருத்தரங்கு 2025 இல் எஸ்.பி.எம் தேர்வு எழுதிய 2,000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்று தங்களது உயர்க்கல்விக்கான அடுத்தக் கட்ட நகர்வுக்கான ஆலோசனைகளையும் விளக்கங்களையும் பெற்றனர்.
இக்கருத்தரங்குகள் கூட்டரசு பிரதேசம் , சிலாங்கூர், பேரா, மலாக்கா, நெகிரி செம்பிலான், பினாங்கு , ஜோகூர் , கெடா ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது.
UTM, USM, UTHM & UTP ஆகிய பல்கலைக்கழகங்களின் தொண்டூழியர்கள், தொழில் நிபுணர்கள், நன்யாங் தெழிற்நுட்ப கல்லூரியின் விரிவுரையாளர் , ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் விரிவுரையாளர்கள், முன்ளாள் தமிப்பள்ளிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முன்னாள் ஆயுதப் படைகளிள் பிரிதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதனிடையே சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பிரதேச மாணவர்களுக்காக இந்த கருத்தரங்கை ம.இ.காவின் தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் அர்விந் கிருஷ்ணன் ( Arvind Krishnan ) நேதாஜி மண்டபத்தில் தொடக்கி வைத்தார்.
எஸ்.பி.எம் தேர்ச்சி முடிவுகள் வெளியான கையோடு நமது மாணவர்களை உயர்க்கல்விக்காக தயார்படுத்தும் உன்னத நோக்கத்தில் நேற்று மேற்கொண்ட இந்த கருத்தரங்கு ஆண்டுதோறும் நடத்தப்படவும் திட்டமிடப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் 600க்கும் மேற்பட்ட மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டது குறித்தும் அவர் தனது மனநிறைவை தெரிவித்தார்.