திருவள்ளூர், ஜன 11 – பொதுவாகவே பண்டிகை நாட்களில் ஒவ்வொரு கடைகளிலும் வித்தியாசமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனிஃபா பிரியாணி உணவகத்தில் வித்தியாசமான சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது திருக்குறள் சொல்பவர்களுக்கு இலவசமாகப் பிரியாணி அளிப்பதாக அறிவித்திருக்கிறது அந்த உணவகம்.
இந்த போட்டியில் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 10 திருக்குறள் சொன்னால் ஒரு பிரியாணி இலவசமாக வழங்கப்படுமாம்.
அதேபோல், பத்து வயதிற்கு மேற்பட்டவர்கள் 20 திருக்குறள் சொன்னால் ஒரு பிரியாணி இலவசமாக வழங்கப்படும்.
ஒருவருக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் திருக்குறளை எழுதிக்கொண்டு வந்து போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே இந்த சலுகையாம்.
உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளின் சிறப்பை மக்களுக்குக் மீண்டும் எடுத்துரைக்கும் வகையில் இப்போட்டியை அறிவுறுத்தியிருக்கும் அவ்வுணவகம் இப்போது மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.