
கோலாலம்பூர், ஜன 29 – இந்நாட்டில் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன் அதற்கு பொருத்தமான மற்றும் சிறந்த இடத்தை தேர்வு செய்யும்படி மலேசியாவில் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வோரை தகவல் மற்றும் இலக்கவியல் அமைச்சர் Fahmi Fadzil கேட்டுக்கொண்டார்.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் சம்பந்தப்படாவிட்டாலும் இதற்கு முன் கலைநிகழ்ச்சியை காண்பதற்கு நுழைவுச் சீட்டு வாங்கியோரிடமிருந்து வந்துள்ள மனக்குமுறல்களை ஏற்பாட்டாளர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற இசைப் புயல் A.R Rahmam னின் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது Fahmi Fadzil இதனை தெரிவித்தார்.