செப்பாங், பிப் 19 – செப்பங் ,கம்புங் பாரு டேங்கில்லில் கார் நிறுத்தப்பட்டது தொடர்பில் அண்டை வீட்டுக்காரர்களிடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து 14 தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டதை Sepang மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் வான் கம்ருல் அஸ்ரன் வான் யூசோப் உறுதிப்படுத்தினார். விசாரணைக்கு உதவும் பொருட்டு 16 முதல் 40 வதுடைய 14 தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றவியல் சட்டத்தின் 148 ஆவது மற்றும் 506ஆவது விதியின் கீழ் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.