Latestஉலகம்

காஸாவுக்கு எண்ணெய் விநியோகம் கிடையாது, பிணையாளிகள் விடுவிக்கப்படாதவரை போர் நிறுத்தம் இல்லை – இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

டெல் அவிவ், நவ 9 – காஸா வட்டாரத்திற்கு எண்ணெய் விநியோகம் வழங்கப்படாது என்பதோடு ஹமாஸ் தரப்பினர் பிணையாளிகளை விடுவிக்காதவரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லையென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

அதோடு லெபனானின் தனது தளத்திலிருந்து ஈரான் ஆதரவிலான ஹிஸ்புல்லாஹ் தரப்பினர் இஸ்ரேலுடன் புதிய தாக்குதலை தொடர்ந்தால் அதன் பதிலடி மிகவும் மோசமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அக்டோபர் 7-ஆம் தேதியன்று இஸ்ரேல் மற்றும் Hamas தரப்பினருக்குமிடையிலான போர் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்ததை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் பெஞ்சமின் நெதன்யாஹு இதனை தெரிவித்தார்.

காஸா வட்டாரத்திற்கு எண்ணெய் விநியோகிக்கப்படாது என்பதோடு ஹமாஸ் தரப்பினர் பிடித்துவைத்துள்ள பிணையாளிகள் விடுவிக்கப்படாதவரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லையெ இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்திருக்கிறார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!