Latestமலேசியா

மெர்சிங் அரசாங்க கிளினிக் நாற்காலியில் சிறுமியின் கால் சிக்கிக் கொண்டது

மெர்சிங், பிப் 1 – மெர்சிங் அரசாங்க கிளினிக்கில் உள்ள நாற்காலியில் 5 வயது சிறுமியின் கால் சிக்கிக் கொண்டதைத் தொடர்ந்து அதனை விடுவிப்பதற்கு தீயணைப்பு வீரர்களின் உதவி நாடப்பட்டது. ஜெமாலுவாங் சுகாதார கிளினிக்கில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக மெர்சிங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கையின் அதிகாரி முகமட் ஜைனுடின் அகமட் தெரிவித்தார். அந்த கிளினிக்கில் மருத்துவ பரிசோதனைக்கு வந்திருந்த தமது கர்ப்பிணி தாயாருடன் அந்த சிறுமி வந்திருந்தார்.

தொடர் நாற்காலியில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியின் கால் இரண்டு நாற்காலிக்கிடையே சிக்கிக் கொண்டதால் காலை எடுக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளானார். தகவல் அறிந்து அந்த கிளினிக்கிற்கு வந்த பதினோரு தீயணைப்பு வீரர்கள் ஹைட்ராலிக் சாதனத்தை பயன்படுத்தி அச்சிறுமியின் காலை விடுவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!