போர்ட் டிக்சனில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வான வேடிக்கையின் போது அதன் வெடிப்பு சிதறல்கள் பட்டதால் 40 வயது ஆடவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததோடு 39 இன்னொருவர் இன்னொருவர் படுகாயமுற்றார்.
அவர்கள் இருவரும் அந்த வான வேடிக்கை பொருத்தும் நிறுவனத்தின் பணியாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இச்சமபவம் அந்த தங்கும் விடுதியின் கார் நிறுத்துமிட கூரையின் மீது நிகழ்ந்ததாக போர்ட்டிக்சன் மாவட்ட போலிஸ் தலைவர் சுப்பரின்டென்டன் ஐடி ஷாம் முகமது தெரிவித்தார்.
நடந்த சம்பவத்தின் காணொளி பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில் அவ்வாறு செய்ய வேண்டாம் என அவர் வலியுறுத்தினார். அது விசாரணைக்கு தடங்கலாக இருக்கும் என்றார் அவர்.
அவ்வாடவரின் மரணம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஐடி ஷாம் கூறினார்.