Latestமலேசியா

நடிகையின் வங்கிக் கணக்கிலிருந்து RM29,000 மாயம்; போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், ஜன 17 – தமது தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து 29,313 ரிங்கிட் மாயமானது குறித்து அதிர்ச்சி அடைந்த 40 வயதான நடிகை ஒருவரிடமிருந்து புகார் பெற்றதைத் தொடர்ந்து தீவிர புலன் விசாரண மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ACP அமிஹிசாம் அப்துல் ஷுக்கோர் தெரிவித்துள்ளார்.

அழகு சாதனப் பொருட்கள் நிறுவனத்தின் நிர்வாகியுமான அந்த நடிகையின் சேமிப்பில் இருந்த அனைத்து பணமும் காணாமல்போனது தொடர்பில் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று அந்த பெண் தமது வங்கிக் கணக்கை பரிசோதித்தபோது அதிலிருந்து ஜனவரி 8ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரை 11 முறை அவருக்கு தெரியாமலேயே பணம் மீட்கப்பட்டுள்ளதாக ACP அமிஹிசாம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!