Latestமலேசியா

இந்தியாவில் ஒடிசா பள்ளியில் கட்டாயப்படுத்தி அமரவைத்ததால் 10 வயது மாணவன் இறந்தான்

ஒடிசா, நவ 23 – அரசுப் பள்ளியில் பத்து வயது மாணவனை ஆசிரியர் கட்டாயப்படுத்தி தோப்புக்கரணம் போடவைத்ததால் அவன் உயிரிழந்த சம்பவம் இந்தியா ஒடிசா ஜெய்ப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

ருத்ர நாராயண் சேத்தி எனும் அந்த மாணவன் கடந்த செவ்வாய்கிழமை, மதியம் 3 மணியளவில் வகுப்பு நேரத்தில் பள்ளி வளாகத்தில் நான்கு சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததற்கு தண்டனையாக ஆசிரியர் தோப்புக்கரணம் போட வைத்துள்ளார்.

அப்போது அம்மாணவன் திடீரென மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அதே சமயத்தில் அம்மாணவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவன் இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.இவ்விவகாரத்தை போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!