Latestமலேசியா

பங்கோர் படகு விபத்தில் உயிரிழந்த மூவர் மாசிமக திருவிழாவிற்கு சென்று கொண்டிருந்தனர்

மஞ்சோங், மார்ச் 8 – பேராக், லுமுட் பங்கோரில் இரு படகுகள் மோதிக் கொண்ட சம்பவத்தில் உயிரிழந்த மூவர், ஶ்ரீ பத்ர காளியம்மன் கோயிலின் மாசிமக திருவிழாவில் கலந்து கொள்ள சென்று மேற்கொண்டிருந்ததாக தெரிய வந்தது.

அந்த விபத்தில் 43 வயது விஜயலெட்சுமி , 41 வயது எலிசெபத் ராணி, 26 வயது ஜி, தேவப்பிரியா ஆகியோர் , கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதனிடையே விசாரணையில், லுமுட்டிலிருந்து பங்கோர் தீவுக்கு 17 பயணிகளை ஏற்றிச் சென்ற மீனவப் படகில் , பாதுகாப்பு அங்கி வைக்கப்பட்டிருக்கவில்லை என மஞ்சோங்( Manjung) மாவட்ட போலீஸ் தலைவர் Noh Omar Sappi தெரிவித்தார்.

எதிரே வந்த மற்றொரு படகு, விளக்கை எரியவிடவில்லை என அவர் குறிப்பிட்டார். மேலும் சம்பவத்தின்போது வானிலை நன்றாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!