Latestமலேசியா

பசியால் வாடவிட்டு பூனைகள் மடிய காரணமான ஆடவனுக்கு 2 ஆண்டுகள் சிறை

கோலாலம்பூர், மார்ச் 28 – வாடகை வீடொன்றில் அழுகிய நிலையில் 20-கும் மேற்பட்ட பூனைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து , அச்சம்பவத்துக்கு காரணமாக இருந்த சரவாக்கைச் சேர்ந்த 31 வயது ஆடவனுக்கு ஈராண்டுகள் சிறையும், 50 ,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

செராஸ், Bandar Sri Permaisuri -யில் உள்ள Bayu Tasik அடுக்குமாடியில் வாடகைக்கு தங்கியிருந்த லிம் ஜியா லின் ( Lim Chia Lin ) என்பவர், உணவு தண்ணீர் கொடுக்காமல் தனது ஐந்து பூனைகளின் இறப்புக்கு காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டான்.

அந்த ஆடவன், ஒரு மாதம் தனது சொந்த ஊருக்கு திரும்பியபோது , தான் வளர்த்து வந்த பூனைகளுக்கு உணவு கிடைப்பதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை.
மேலும் பட்டினியால் மடிந்த அந்த பூனைகளின் சடலங்களைப் புதைக்காமல் வீட்டிலேயே வைத்திருந்ததால், கடும் துர்நாற்றம் வீசியதா, குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!