Latestமலேசியா

ஜோகூர் தங்காக்கில் 3 லோரிகள் விபத்து; இருவர் மரணம்

ஜோகூர் பாரு, டிச 21 –  ஜோகூரில், தங்காக்கில் வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் 164.8ஆவது கிலோமீட்டரில் மூன்று லோரிகள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் இருவர் மரணம் அடைந்தனர். இன்று அதிகாலை மணி 4.26 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் ஐந்து டன் ஹினோ வகை லோரி இதர இரண்டு லோரிகளை மோதியது. இதனால் அந்த ஹினோ வகை லோரியில் இருந்த இருவர் சிக்கிக்கொண்ட நிலையில் அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவ உதவியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!