கோலாலம்பூர், பிப் 6 – அம்னோ தலைவர் ஸாஹிட் ஹமிடி மற்றும் அக்கட்சியின் டிவிசன் தலைவர்களுடன் நேற்று நடைபெற்ற ரகசிய கூட்டத்தில் ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவை கட்சி மீட்டுக்கொள்ள வேண்டுமென டிவிசன் தலைவர்களில் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். “SRC Interanational” தொடர்பான வழக்கில் நஜீப் ரசாக்கிற்கு முழு மன்னிப்பு கிடைக்கத் தவறியதைத் தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவு மீட்டுக்கொள்வது மற்றும் அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாக பெயர் தெரிவிக்காத அம்னோ தலைவர் ஒருவர் தெரிவித்தார். எனினும் ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ளும் முடிவு அம்னோவுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்ற சாத்தியம் இருப்பதாக அந்த தலைவர் தெரிவித்தார்.