Latestமலேசியா

படகு கவிழ்ந்து தாய் மூழ்கி மரணம் இரு பிள்ளைகள் காணவில்லை

கோத்தா கினபாலு, ஏப் 13 – சபாவில் Kampung Sin Singon னில் Sungai Penawan ஆற்றில் படகு மூழ்கியதில் 26 வயதுடை பெண் மூழ்கி மாண்டார். அந்த சம்பவத்தில் அவரது 9 மற்றும் 7 வயது பிள்ளைகள் காணவில்லை என அறிவிக்கப்பட்டது. அந்த பெண்ணின் 36 வயது கணவரும் 5 வயதுடைய மற்றொரு மகனும் உயிர் தப்பினர். Lerina Rody என்ற பெண்ணின் உடலை பொதுமக்கள் கண்டதைத் தொடர்ந்து அவரது உடல் மீட்கப்பட்டது. காணாமல்போன இருவரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!