Latestமலேசியா

பத்துமலை கோயிலில் இவ்வாண்டு ஒற்றுமை பொங்கல்

கோலாலம்பூர், ஜன 4 – இம்மாதம் ஜனவரி 15 -ஆம் தேதி , ஞாயிற்றுக்கிழமை வரவேற்கப்படும் பொங்கலை முன்னிட்டு , பத்துமலை கோயிலில் , ‘ஒற்றுமை பொங்கலுக்கு’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இவ்வாண்டு பொங்கலை மிகச் சிறப்பாக, அனைவருடனும் சேர்ந்து கொண்டாடும் நோக்கத்தில் , அனைத்து வயது பெண்களும் பொங்கல் வைக்க அழைக்கப்படுவதாக, கோலாலம்பூர் ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜா கேட்டுக் கொண்டார்.

பொங்கல் பானை, பால் உட்பட பொங்கல் வைப்பதற்கான அனைத்து பொருட்களையும் , வசதிகளையும் ஆலயத் தரப்பே ஏற்பாடு செய்யும் . அதையடுத்து, ஏற்பாடுகள் முழுமையாக செய்வதற்காக, பொங்கல் வைக்க எண்ணியிருப்பவர்கள் ஆலய தரப்புடன் முன்பதிவு செய்துக் கொள்ளுமாறும் நடராஜா கேட்டுக் கொண்டார்.

இதனிடையே இந்த ஒற்றுமை பொங்கல் நிகழ்ச்சியோடு, சமயம், கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகளுடன், இசை நிகழ்ச்சியும் நடைபெறுமென அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!