Latestமலேசியா

பந்திங்கில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போன 15 வயது சிறுமியுடையதே; போலீஸ் உறுதிப்படுத்தியது

கோலாலம்பூர், ஜனவரி-2 – சிலாங்கூர் பந்திங்கில் உள்ள ஆற்றொன்றில் டிசம்பர் 28-ஆம் தேதி அழுகிப் போன நிலையில் கண்டுடெடுக்கப்பட்ட சடலம், காணாமல் போன 15 வயது சிறுமி Yap Xin Yuan-னுடையதே.

சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் (Datuk Hussein Omar Khan) அதனை உறுதிபடுத்தியுள்ளார்.

இன்று இரசாயணத் துறைக்குக் கிடைத்த மரபணு பரிசோதனை முடிவில் அது தெரிய வந்ததாக அவர் சொன்னார்.

இன்று மாலை குடும்பத்தார் பந்திங் மருத்துவமனையிலிருந்து சடலத்தைக் கோருவர் என்றார் அவர்.

பந்திங், Sungai Changgang ஆற்றில் கடந்த சனிக்கிழமை அச்சடலம் கண்டெடுக்கப்பட்டது.

Yap Xin Yuan காணாமல் போனதாக டிசம்பர் 20-ஆம் தேதி செராஸ், பத்து 9 போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

செராஸ், பத்து 11-ல், கூடைப்பந்து அரங்கில் சிங்க நடனப் பயிற்சி முடிந்து அவள் வீடு திரும்பாததால், அப்புகார் செய்யப்பட்டது.

கடைசியாகப் பார்க்கப்பட்ட போது அவர் சிவப்பு சிற சிங்க நடன உடையிலிருந்தார்.

இந்நிலையில் விசாரணைக்காக, அச்சிறுமியின் காதலன் உள்ளிட்ட 3 ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!