Latestஉலகம்

சீனாவில், உணவகத்தில் வெடிப்பு ; ஒருவர் பலி, 22 பேர் படுகாயம்

சீனா, மார்ச் 13 – சீனா, ஹெபெய் மாநிலத்திலுள்ள, உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். இதர 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சன்ஹே மாவட்டத்திலுள்ள, கோழியை பொறித்து விற்பனை செய்யும் கடை ஒன்றில் அந்த வெடிப்பு ஏற்பட்டது.

எரிவாயு கசிவு காரணமாக அந்த வெடிப்பு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

அந்த வெடிப்பு தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

வெடிப்பு காரணமாக உடைந்த கண்ணாடி துண்டுகள் சாலையில் சிதறிக் கிடக்கும் காட்சிகளும் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளன.

அந்த வெடிப்பால், உணவகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!