Latestமலேசியா

பெந்தோங் , சாமாங்கில் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் 4 சிலைகள் சேதப்படுத்தியது தொடர்பில் போலீஸ் தீவிர விசாரணை

பெந்தோங், மார்ச் 26 – Bentong . Chamang கிலுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் கடந்த வாரம் நான்கு சிலைகள் சேதப்படுத்திய நபர்களை தேடும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் தொடர்பில் அந்த 35ஆண்டுகால ஆலயத்தின் அர்ச்சகர் மார்ச் 17ஆம் தேதி போலீசில் புகார் செய்திருப்பதாக Bentong போலீஸ் தலைவர் Superintendent Zaiham Mohd வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். அந்த ஆலயத்தில் சேதப்படுத்தப்பட்ட நான்கு சிலைகளையும் போலீசார் கண்டனர்.

அந்த ஆலய வளாகத்திற்கு உள்ளேயும் , வெயியிலும் ரகசிய கண்காணிப்பு கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை. உடைக்கப்பட்ட அந்த சிலைகள் ஆலயத்தின் கூரையில் அமைக்கப்பட்டிருந்ததே தவிர பிரதான ஆலயத்தின் ஒரு பகுதியாக இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தளங்களை சேதப்படுத்தியது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் 295ஆவது விதியின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Zaiham தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!