டிச 2 – எந்த ஆசைக்கும் வயது ஒரு பொருட்டே அல்ல. வயதும் முதுமையும் உடலுக்குத் தானே தவிர, ஆசைக்கு இல்லை என்பதை நிருபித்துள்ளார் பிலிப்பைன்ஸ் மூதாட்டி ஒருவர்.
லூயிசா யூ எனும் 79 வயதுடைய மூதாட்டி 193 நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவை கடந்த நவம்பர் 9 அன்று செர்பியாவிற்கு இறுதியாகப் பயணம் செய்து தனது கனவை நினைவாக்கியுள்ளார்.
ஐ.நா. நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவைத் தொடர மியாமியில் செவிலியர் வேலையை கைவிட்டு, தனது சொத்துகளை விற்று தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.
23 வயதில் அமெரிக்காவைச் சுற்றிப் பயணம் செய்யத் தொடங்கியவர், பின் மியாமிக்குச் சென்று, மேலும் 40க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்குப் பயணம் சென்ற பிறகே, அவர் உலகம் முழுவதும் பயணம் செய்ய முடிவு செய்யததாக தெரிவித்துள்ளார்.
தனது இறுதி நாட்டினை பயணம் செய்து முடித்த இவர், அனைவரையும் பயணியுங்கள், காத்திருந்தால் எதுவும் நடக்காது என அறிவுறுத்தியுள்ளார்.