கோலாலம்பூர், பிப் 15 – சில்வர் வர்ண MYVI காரில் வந்திருங்கிய ஆடவர் ஒருவர் செய்த செய்த செயல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
அடையாளம் தெரியாத ஆடவன் ஒருவன், ஒரு கடையின் முன் காரை முதலில் பின்புறமாக நிறுத்தி,பின் தன்னை ஆசுவசப்படுத்திக்கொண்டு காரின் பின்புற பகுதியை திறந்து சுற்றும் முற்றும் நோட்டமிடுகிறான்.
பின்னர் எங்கேயோ பார்த்துக்கொண்டு செல்வது போல பசாங்கு செய்து, லாவகமாக அக்கடையின் முன் உள்ள பூச்சாடியை தூக்கி காரில் வைக்கும் காட்சி பலருக்கு அதிர்ச்சியையும் சிரிப்பையும் மூட்டியுள்ளது.
இதனை தொடர்ந்து வைரலாகும் அந்த காணொளியின் கீழ் திருட்டுகள் பலவிதம், அதில் பூச்சாடி திருட்டும் ஒருவிதம் என்று கேலியாக பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே காணொளியை பதிவிட்டவர், மீண்டும் அந்த பூச்சாடியை உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு அந்த திருடனை கேட்டுக்கொண்டுள்ளார்.