Latestமலேசியா

பள்ளிக்கு செல்ல மறுத்த மகனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்ற தாய்

கோலாலம்பூர், மார்ச் 25 – பள்ளிக்கு செல்லாமல் அடம்பிடித்த மகனை , போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார் தாய் ஒருவர்.
அதன் தொடர்பான 2 நிமிட காணொளி சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டிருக்கிறது.

அதில், தனது மகனின் பெயரை குறித்துக் கொள்ளுங்கள். பள்ளிக்கு செல்ல மறுத்தால் நீங்கள் அவனை அழைத்துச் சென்று விடுங்கள் என, போலீஸ்காரரிடம், தாய் கூறுவதைப் பார்க்க முடிகிறது .

பிறகு, அந்த தாயுடன் சேர்ந்து போலீஸ்காரர், சிறுவனை போலிஸ் நிலையத்திற்குள் வரும்படி அழைத்துள்ளார்.

போலீஸ் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட அந்த காணொளியைப் பார்த்து பலர் ரசித்ததோடு, பலருக்கு சிரிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!