கோலாலம்பூர், நவ 26 – கோலாலம்பூரில் நேற்று பெய்த கடுமையான மழையினால் தாமான் செராஸ் மாஸ் அடுக்குமாடி குடியிருப்பு வட்டாரத்தில் 30 மீட்டர் பகுதில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை மணி 4.35 அளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடத்திற்கு பண்டார் துன் ஹுசேன் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத்துறையின் இயக்குனர் வான் முஹாம்மாட் ரசாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
நிலச்சரிவுக்கு உள்ளான அந்த குன்றுப் பகுதியை தாங்கள் பார்வையிட்டதாகவும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அது அச்சுறுத்தலாக இல்லையென்பதோடு அந்த இடம் முற்றுகையிடப்பட்டுள்ளதாக ஹவான் முஹாம்மாட் ரசாலி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை. இந்த விவகாரம் ஊராட்சி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.