
சீனா, ஜன 31 – பெய்ஜிங்கில், பழச்சாறு என எண்ணி சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ‘வாஷிங்’ திரவத்தை குடித்த உணவகம் ஒன்றின் வாடிக்கையாளர்கள் எழுவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இம்மாதம் 16-ஆம் தேதி, சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தவர்களுக்கு, பணியாளர் ஒருவர் பழச்சாறு என எண்ணி ‘வாஷிங்’ திரவத்தை ஊற்றி கொடுத்துள்ளார்.
எனினும், அந்த திரவத்தை குடித்த எழுவரின் நிலை தற்போது சீராக இருக்கும் வேளை ; சம்பந்தப்பட்ட உணவகம் அவர்களுக்கு இழப்பீட்டை வழங்கியதாக போலீஸ் தெரிவித்தது.