Latestஇந்தியா

புதுடில்லியில் மோசமான பனி மூட்டம் விமானங்கள் ரயில் பயணங்கள் தடை

புதுடில்லி, டிச 26 – இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இன்று காலையில் மோசமான பனி மூட்டம் காரணமாக விமானங்கள் மற்றும் ரயில் பயணச் சேவைகளில் பாதிப்பு அல்லது தடை ஏற்பட்டன.

சில இடங்களில் பார்க்கும் தூரங்கள் 50 மீட்டருக்கும் குறைவாக இருந்ததால் விமான மற்றும் ரயில் பயண சேவை பாதிக்கப்பட்டது. புதுடில்லியில் பனி மூட்டம் மோசமாக இருந்ததாக கூறப்பட்டது.

புதன்கிழமை காலை வரை பனிமூட்டம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான பனி மூட்டத்தினால் அனைத்துலக வழித்தடத்திற்கான புதுடில்லியிருந்து 30க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதிலும் தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டதாக இந்திய செய்தி நிறுவனம் அறிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!