
புதுடில்லி, மே 9 – இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் இந்தூருக்கு சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அதில் பயணம் செய்த பயணிகளில் குறைந்தது 15 பேர் மாண்டனர். அந்த பஸ் ஓட்டுனர் தூங்கியதால் அந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. அந்த விபத்தில் 37 பேர் காயம் அடைந்தனர். இறந்தவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவர்.