Latestமலேசியா

பினாங்கு போலிஸ் தலைவருக்கு வட்டி முதலைகளிடமிருந்து மிரட்டல் கடிதம் ; 13 சந்தேக பேர்வழிகள் கைது

கோலாலம்பூர் , ஜூன் 6 – ஜூன் 1-ஆம் தேதி பினாங்கு போலீசுக்கு அஞ்சல் வழி அனுப்பிய மிரட்டல் கடிதத்தை முன்னிட்டு நாட்டில் வட்டி தொழிலில் ஈடுபட்ட 13 சந்தேக பேர்வழிகளைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த 13 பேரும் பினாங்கு மற்றும் பேராக் மாநிலங்களில் கைது செய்யப்பட்டதாக , பினாங்கு மாநில போலீஸ் தலைவர் Datuk Khaw Kok Chin தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அந்த 13 நபர்களின் மீது பணம் கடன் வழங்குபவர்கள் 1951-ஆண்டு , சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறினார்.

இதனிடையே, இத்தகைய ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட வட்டி முதலைகளின் மீது கடுமையான தண்டனை எடுக்கப்படும் என, போலீஸ் படை தலைவர், Tan Sri Acryl Sani Abdullah Sani எச்சரித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!