Latestமலேசியா

திவாலை தவிர்க்க ஓய்வூதியம் இல்லாத திட்டம் தேவை – பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஈப்போ, ஜன 29 – நாடு திவாலை தவிர்க்க ஓய்வூதியம் இல்லாத திட்டம் தேவையென்பதோடு புதிய அரசு ஊழியர்களுக்கு ஓவ்வூதிய திட்டத்தை அகற்றும் முடிவு மலாய்க்காரர்களை பாதிக்கும் நோக்கத்தை கொண்டது என கூறப்படுவதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்தார். இத்திட்டம் தொடர்பில் நீண்ட காலமாகவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் நாடு திவலாகும் அபாயத்தை தவிர்ப்பதற்கு புதிய திட்டம் தேவையென அவர் கூறினார். புதிய தலைமுறைகள் பிரச்சனையை எதிர்நோக்காமல் இருப்பதற்கு புதிய திட்டம் தேவையென அவர் வலியுறுத்தினார்.

1900-ஆம் ஆண்டுகளிலிருந்து ஓய்வூதியத்திற்கு மாற்று திட்டம் குறித்து ஆராயப்பட்டு வந்ததாகவும் இதனை அமல்படுத்துவதற்கு அரசியல் காரணம் எதுவும் காரணம் இல்லையென அவர் கூறினார். மலாக்காரர்களை பழிவாங்குவதற்காக ஓய்வூதியத் திட்டம் ரத்துச் செய்யப்படுவதாக எதிர்க்கட்சி கூறிவருவதை அன்வார் மறுத்தார். சில மேம்பாடு அடைந்த நாடுகள் ஏற்கனவே ஓய்வூதிய திட்டத்தை ரத்துச் செய்துவிட்டன. புதிய அரசு சேவை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் அல்லாத திட்டம் ரத்துச் செய்யப்பட்டால் தங்களுக்கும் அது பாதிப்பு என்பதை அரசியல்வாதிகளும் உணர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!