Latestமலேசியா

ரமணனுக்கு பதில் மித்ரா பணிக்குழுவின் தலைவராக பத்து எம்.பி பிரபாகரன் நியமனம் – டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர், பிப் 7 – மித்ரா சிறப்பு பணிக்குழுவின் தலைவராக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் P. பிரபாகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அண்மையில் தொழில்முனைவர் மேம்பாடு , கூட்டுறவு துணையமைச்சராக நியமிக்கப்பட்ட டத்தோ ரமணன் ராமகிருஷ்ணனுக்கு பதில் பிரபாகரனை மித்ரா சிறப்பு பணிக்குழுவின் தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமித்துள்ளார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார நிலை மற்றும் கௌரவத்தை நிலைநாட்டுவதில் முழு நம்பிக்கை மற்றும் கடப்பாட்டுடன் செயல்படுவதை பிரபாகரன் நியமனம் உறுதிப்படுத்தும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2023-ஆம் ஆண்டுக்கான அனைத்து இலக்கையும் இதற்கு முன் மித்ரா சிறப்பு பணி குழு நிறைவேற்றியுள்ளதோடு அதன் நிதி வெளிப்டையாகவும், பொறுப்புணர்வுடன் மற்றும் பாதுகாப்புடன் பயன்படுத்தியிருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் அமைச்சரவை மாற்றத்தில் துணையமைச்சராக நியமிக்கப்பட்டபோது ரமணன் கூறியிருந்தார். மித்ராவின் தோற்றத்தை மாற்றி இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு உயர் விளைவுகள் ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கையில் மித்ராவின் முக்கிய இலக்கும் கவனமும் இருந்ததாக அவர் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!