Latestஉலகம்

காதல் வெறியில் TV தொகுப்பாளரரைக் கடத்தியப் பெண் கைது!

ஹைதராபாத், பிப்ரவரி 24 – இந்தியா, ஹைதரபாத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளரை திருமணம் செய்துக் கொள்வதற்காக, ஆள் வைத்து அவரை கடத்தியப் பெண் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

தொலைக்காட்சியின் இசை அலைவரிசை தொகுப்பாளர் மீது தீராத காதல் கொண்ட 31 வயது வர்த்தகர் தான் அந்த வேலையைச் செய்திருக்கிறார்.

தன் ‘மனம் கவர்ந்தவரை’ பின் தொடருவதற்காக அவருக்கே தெரியாமல் அவரின் காரில் ரகசிய கண்காணிப்பு சாதனதைப் பொருத்தி, நால்வர் கொண்ட குழுவை அமர்த்தி அவரின் நடமாட்டத்தை அப்பெண் கண்காணித்து வந்திருக்கிறார்.

பிப்ரவரி 11-ஆம் தேதி அந்நால்வரும் அந்த தொகுப்பாளரை ‘வெற்றிகரமாக’ கடத்தி அப்பெண்ணின் அலுவலகத்திற்கு கொண்டுச் சென்றனர்.

அங்கு அவர் சரமாரியாகத் தாக்கப்பட்டுள்ளார்; கடைசியில் உயிருக்கு அஞ்சி, வேறு வழியின்றி அப்பெண்ணை திருமணம் செய்துக் கொள்வதாக அவர் கூறிய பிறகே, அவரை அப்பெண் விடுவித்தார்.

தப்பித்த அந்தத் தொகுப்பாளர் போலீசில் புகார் செய்ய, கடத்தல் குற்றத்தின் பேரில் அந்த ‘ஒருதலைபட்ச காதல் – கடத்தல் ராணி’ கைதானார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!