Latestமலேசியா

2024 ஜனவரி 10 முதல் 14 திகதி வரை பினாங்கில் நீர் விநியோகத் தடை

ஜார்ஜ் டவுன், டிச 8 – பினாங்கில் சுமார் 590,000 பேர் அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை நீர் விநியோகத் தடையைச் சந்திப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 வருடங்களாகப் மாற்றப்படாத நீர் ஒழுகும் குழாய்களை சுங்கை டுவா நீர் திட்டத்தின் கீழ், நீர் விநியோக கழகத்தின் (PBAPP) தலைமையில் குழாய்கள் மாற்றியமைக்கப்படவிருப்பதால் இத்தடை ஏற்படவுள்ளது.

செபெராங் பெராய், புலாவ் திக்குஸ், ஜார்ஜ் டவுன், ஜெலுத்தோங், கெலுகோர், புக்கிட் ஜம்புல், ரெலாவ், பயான் லெபாஸ், பயான் பாரு, பத்து மாவுங், தெலுக் கும்பார் மற்றும் பாலிக் புலாவ் ஆகியவை நீர் தடைக்கு உட்பட்டவுள்ள இடங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆகையால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான நீரை கையிருப்பை வைத்துக்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!