Latestஉலகம்

ரஷ்யாவில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு, 40 பேர் பலி; தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது IS

மோஸ்கோ, மார்ச் 23 – ரஷ்ய தலைநகர் மோஸ்கோவில் இசை நிகழ்ச்சியின் போது அரங்கினுள் புகுந்து மர்ப நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி, வெடிகுண்டுகளையும் வீசியதில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்; இசை நிகழ்ச்சி நடைப்பெற்ற அரங்கு முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அத்தாக்குதலுக்கு IS இஸ்லாமிய தரப்பு பொறுப்பேற்றிருக்கிறது.
தாக்குதல் நடத்திய தனது ஆட்கள் பாதுகாப்பாகத் திரும்பியிருப்பதாகவும் அது கூறிக் கொண்டது.

தீயிணை அணைக்கும் முயற்சிகளும், மீட்புப் பணிகளும் அங்கு முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் குழுமியிருந்த அரங்கில் ரஷ்ய இராணுவ உடை அணிந்திருந்த 5 மர்ம நபர்கள் அக்கொடூர தாக்குதலை மேற்கொண்டது தொடக்கக்கட்ட கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இத்தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் வேளை, அதிபர் விளாடிமிர் புட்டினுக்கும் அது குறித்து உடனடி தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

புட்டின் அண்மையில் தான் மீண்டும் அதிபரான நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதால் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!