சிரம்பான், பிப் 20 – தனது சகோதரன் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் பல் கிளினிக் வேனில் மோதியதைத் தொடர்ந்து அந்த மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த கர்ப்பணி ஒருவர் மரணம் அடைந்தார். Pekan Kota, Jalan Seremban – Tampin சாலையில் 37.8 கிலோமீட்டரில் நிகழ்ந்த அந்த விபத்தில் தலையில் காயம் அடைந்த 32 வயதுடைய Nona Toni என்ற பூர்வகுடி பெண் மரணம் அடைந்தார். அந்த விபத்தில் அப்பெண்ணின் மூன்று வயது மகனும் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபரும் காயம் அடைந்தனர் என Rembau OCPD துணை சூப்பிரடண்ட் Hazri Mohamad தெரிவித்தார். அந்த கர்பிணியின் 28 வயது சகோதரர் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் சாலை சந்திப்பில் கவனக் குறைவாக தடம் மாறியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார்.
Check Also
Close