மலாக்கா, நவம்பர் 27 – மலாக்கா, தாமான் டெக்னாலஜி செங்கில் செயல்பட்டு வந்த, பிரபல “காப்பி” தொழிற்சாலைக்கு சொந்தமான கிடங்கு ஒன்று நேற்றிரவு தீயில் அழிந்தது.
அந்த தீ விபத்து குறித்து, இரவு மணி பத்து வாக்கில் அவசர அழைப்பு கிடைத்ததை, மலாக்கா மாநில தீயணைப்பு மீட்பு துறையின், முதலாவது மண்டலத்திற்கான தலைவர் சுல்கைராணி ரம்லி தெரிவித்தார்.
எனினும், தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்தை சென்றடைந்த போது, சுமார் ஏழாயிரத்து 200 சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கும் அந்த கிடங்கு, தீயில் 90 விழுக்காடு சேதமடைந்திருந்ததாக அவர் சொன்னார்.
இரவு மணி 11.05 வாக்கில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ பரவிய போது, கிடங்கில் தொழிலாளர்கள் யாரும் இல்லை என்பதால், உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தீக்கான காரணமும், மொத்த இழப்பும் ஆராயப்பட்டு வருகிறது.