
மக்கள் மற்றும் நாட்டிற்கான பொருளாதார சுபிட்சத்திற்காக 2030 ஆம் ஆண்டுவரைக்குமான புதிய தொழிலியல் பெருந்திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தும்படி மாட்சிமை தங்கிய பேரரசர் Al Sultan Abdullah அறைகூவல் விடுத்துள்ளார். இந்த நோக்கத்திற்காக சம்பந்தப்பட்ட தரப்பினரும் நிறுவனங்களும் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதன் மூலம் பெரிய அளவில் தொழிலியல் உருமாற்றம் சுமூகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமல்படுத்த முடியும் என அவர் கூறினார். பெருந்திட்டத்தை அமல்படுத்தவதன் மூலம் மலேசியா தொடர்ந்து போட்டா போட்டி மற்றும் வட்டார பொருளாதார வல்லரசாகவும் உருவாக முடியும் என இன்று இஸ்தானா நெகாராவின் முகநூலில் Al Sultan Abdullah பதிவேற்றம் செய்துள்ளார்.