நியூசிலாந்து, மார்ச் 11 – சிட்னியிலிருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கு புறப்பட்டு சென்ற விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறில் சிக்கியதைத் தொடர்ந்து 50 பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப கோளாறோடு தரையிறங்கிய ‘Latam Airlines’ விமானத்தில் பயணித்த 50 பயணிகளுக்கு சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 13 பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
‘பயணிகள் பலர் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். சிலர் விமானத்தின் கூரையில் மோதினர். மொத்த விமானமும் பயணிகளின் அலறல் சத்தத்தால் அதிர்ந்தது” என இந்த விபத்தில் சிக்கிய பயணி ஒருவர் விவரித்தார்.
இந்நிலையில், சம்பவம் நடக்கும் போது பெரும்பாலான பயணிகள் இருக்கை பெல்ட் அணிந்திருக்கவில்லையாம். இருப்பினும் உரிய நேரத்தில் அந்த விமானம் ஆக்லாந்து விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது