Latestமலேசியா

புதிய பள்ளித் தவணை மீண்டும் ஜனவரிக்கு திரும்பும் ; கல்வியமைச்சு உறுதி

ஷா ஆலாம், மார்ச் 23 – புதிய பள்ளித் தவணையின் தொடக்கம் மீண்டும் ஜனவரி மாதத்திற்கு திரும்பும் என கல்வியமைச்சு உறுதியளித்திருக்கிறது . எனினும் அதற்கு சில கால அவகாசம் தேவைப்படுவதாக, அமைச்சர் பட்லினா சீடேக் ( Fadhlina Sidek ) தெரிவித்தார்.

கோவிட் பெருந்தொற்றை அடுத்து, 2022 -ஆம் ஆண்டு தொடங்கி , புதிய பள்ளித் தவணையின் தொடக்கம், ஜனவரியிலிருந்து மார்ச்சிற்கு மாற்றப்பட்டது.

எனினும், மீண்டும் ஜனவரிக்கே புதிய பள்ளித் தவணை திரும்ப வேண்டுமென , பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதையடுத்து, 190 பள்ளி நாட்கள், முக்கிய தேர்வுகள் போன்றவை தடைபடாமல் இருக்க, அந்த மாற்றத்தை செய்ய அமைச்சுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக பட்லினா சீடேக் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!