கோலாலம்பூர், டிசம்பர் 22 – புடு “ரவுண்டபெளட்” வட்ட சாலையிலிருந்து, ஜாலான் சுங்கை பெசி நோக்கி செல்லும் சாலை, இம்மாதம் 27-ஆம் தேதி தொடங்கி 2025-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வரையில், போக்குவரத்துக்கு முழுமையாக மூடப்படும்.
புடு போலீஸ் நிலையத்திற்கு அடுத்துள்ள, புடு வட்ட சாலையிலுள்ள, பாலத்தை இடித்து விட்டு, அங்கிருந்து ஜாலான் சுங்கை பெசி நோக்கி செல்லும் சாலையில், புது பாலத்தை கட்டவும், அந்த சாலை மூடப்படுவதாக, DBKL – கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
அதனால், மாற்று வழிப் பாதையாக, ஜாலான் சுங்கை பெசி, ஜாலான் போஸ், ஜாலான் சான் சோவ் லின், ஜாலான் சத்து, ஜாலான் டுவா அல்லது ஜாலான் தீகா சாலைகளை பயன்படுத்தலாம்.
குழப்பம் அல்லது சிரமத்தை தவிர்க்க, வாகனமோட்டிகள் சாலை வழிகாட்டி அல்லது சாலை சமிக்ஞைகள் அல்லது போக்குவரத்து போலீசாரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.