மலாக்கா , பிப் 5 – போலி பணக் கோரிக்கையில் சம்பந்தப்பட்டதன் தொடர்பில் கூட்டரசு அரசாங்கத்தின் இரண்டு இயக்குனர்களை எம்.ஏ.சி.சி கைது செய்துள்ளது. மலாக்கா எம்.ஏ.சி.சி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர். தனியார் நிறுவனத்தின் இயக்குனரான மூன்றாவது நபரும் கைது செய்யப்பட்டதாக மலாக்கா எம்.ஏ.சி.சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு அரசாங்கத் துறையின் இயக்குனர் ஒருவர் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிக்காக சில பொருட்களை விநியோகிப்பதற்காக 24,900 ரிங்கிட் போலி இன்வொய்ஸ் தயாரித்துள்ளதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு உடந்தையாக இருந்ததாக நிறுவன இயக்குனர் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். மற்றொரு நிலவரத்தில் 6,000 ரிங்கிட் பணக் கோரிக்கை தொடர்பில் அரசாங்கத்துறையின் பெண் இயக்குனர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். அந்த இருவர் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக மேலும் சில அரசு ஊழியர்கள் கைது செய்யப்படலாம் என மலாக்கா எம்.ஏ.சி.சி இயக்குனர் முகமட் ஷஹரில் சே சாட் கூறினார்.