புத்ராஜெயா, ஜனவரி 3 – நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் கண்ட அரசாங்கத்தின் PADU தரவுத் தளத்தில், இதுவரை இரண்டு லட்சத்து 33 ஆயிரத்து 782 பேர் பதிந்து கொண்டுள்ளனர்.
அதில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 115 பேர் அல்லது 71 விழுக்காட்டினர், முழுமையாக தங்கள் பதிவு நடவடிக்கையை முடித்துள்ளதாக, பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி தெரிவித்தார்.
நேற்று அதிகாரபூர்வமாக அறிமுகம் கண்ட PADU தரவுத் தளத்தில் இதுவரை பலவீனம் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும், அமைச்சர் சொன்னார்.
PADU தரவுத் தளத்தில், ஒருவர் தங்கள் கைபேசி எண்ணை கொண்டு, தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்து ஐந்து முறை பதிவுச் செய்யலாம்.
18 வயதுக்கு மேற்பட்ட மலேசியர்கள், PADU தரவுத் தளத்தில் கேட்கப்படும் 39 வகையான விவரங்களை பதிந்து கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.