செராஸ், மார்ச்-8, கோலாலம்பூர், செராசில் 12-வது மாடியில் இருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் 12 வயது சிறுவன் இறந்துக் கிடக்கக் கண்டெடுக்கப்பட்டான்.
செராஸ் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் வியாழக்கிழமை பிற்பகல் வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து போலீஸ் சென்று பார்த்த போது, புற்தரையில் சுயநினைவற்ற நிலையில் அவன் கிடந்ததாக, செராஸ் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சொன்னார்.
அங்கு வரவழைக்கப்பட்ட மருத்துவக் குழு, அச்சிறுவன் உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தியது.
தொடக்கக் கட்ட விசாரணையில் அவனது மரணத்தில் குற்றவியல் அம்சங்கள் எதுவும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, தற்போதைக்கு அது ஒரு திடீர் மரணமாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது.
என்றாலும் அவன் மரணமடைந்ததற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய, மேற்கொண்டு விசாரணைகள் நடைபெறும் என்றார் அவர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்புக் கொள்ளலாம்.