Latestஉலகம்

காஸாவிலுள்ள Al Shifa மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் தரப்பு கூறிக்கொண்டது

கெய்ரோ, நவ 7 – காஸாவிலுள்ள அல் ஷிஃபா மருத்துமவனை வளாகத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டதோடு பலர் காயம் அடைந்ததாக ஹமாஸ் தரப்பின் கட்டுப்பாட்டிலான சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது. ஆனால் இந்த தகவலை இஸ்ரேல் மறுத்துள்ளது. அல் ஷிஃபா மருத்துவமனையில் இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டபோது அங்கு 170 நோயாளிகளும், போரினால் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களும் அந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்தாக காஸா சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

அந்த தாக்குதல் சம்பவத்தில் பலர் காயம் அடைந்ததாக கூறப்பட்டது. இதனிடையே இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் காஸாவில் 10,000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். 4,104 சிறார்கள், 2,641 பெண்களும் உயிரிழந்தவர்களில் அடங்குவர் என்பதோடு 25,000 த்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக அந்த பேச்சாளர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!