Latestஉலகம்

அழிவை எதிர்நோக்கியுள்ள முட்டையிடும் பாலூட்டி எக்கிட்னா; கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

இந்தோனேசியா, நவம்பர் 16 – இந்தோனேசியா, பப்புவா மாநிலத்தில், அடர்ந்த காடுகள் நிறைந்த சைக்ளோப்ஸ் (Cyclops) மலைப்பகுதியிலிருந்து, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக காணப்படாத, அழிந்து வரும் அரிய வகை முட்டையிடும் பாலுட்டி மீண்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த அபாயகரமான மலைத் தொடர் பகுதியில், சவால்மிகுந்த பயணத்தை மேற்கொண்டிருந்த போது, ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று அந்த விநோதமான தோற்றம் கொண்ட பாலூட்டியை அடையாளம் கண்டதாக கூறப்படுகிறது.

சட்டவிரோத வேட்டைக்கு பெயர்போன ‘Cyclops’ மலைப்பகுதில் மட்டுமே, ‘Attenborough’s long-beaked echidna’ அல்லது ‘Sir David’s long-beaked echidna’ என அழைக்கப்படும் அந்த விநோத பாலுட்டி தற்போது அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நீண்ட அழகுகளை கொண்ட எக்கிட்னா, சக்திவாய்ந்த தோண்டும் ஆற்றலுடையது.

மண்ணை தோண்டி புழுக்களை உண்ணும் எக்கிட்னா, தோண்டிய குழிக்குள் பதுங்கிக் கொள்ளும் என்பதால், அதனை அவ்வளவு எளிதாக காணவோ பிடிக்கவோ முடியாது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

அதனால், சுமார் 80 காமிராக்களை ஒருங்கே பொருத்தி எக்கிட்னாவை அவர்கள் அடையாளம் கண்டதாக கூறப்படுகிறது.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, மனிதர்கள் கண்ணில் படாமால், அழிந்து விட்டதாக கருதப்பட்ட எக்கிட்னா தொடர்பான மேல் விவரங்களை சேகரிக்க, ஆய்வு நடவடிக்கைகள் தொடர்கின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!