
கோலாலம்பூர், ஏப் 25 – ஒரு நபரை கடந்த வாரம் மிரட்டி பணம் பறித்தது , அடைத்து வைத்தது, மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஒரு பெண் உட்பட 8 பேர் ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஒப்புக் கொண்டனர். Bella என்று அழைக்கப்படும் 22 வயதுடைய Nuredrianna Balqqisyh Anabella Norazman என்ற பெண்ணுடன் இதர ஏழு இளைஞர்கள் மீது மாஜிஸ்திரேட்ட Atifah Azimah Wahab முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது.
முதல் குற்றச்சாட்டில் 22 வயதுடைய Faris Syahmi Ridzwan என்பவரை கொலை செய்யப்போவதாக மிரட்டியதாக அந்த எண்மர் மீதும் கூட்டாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஜோகூர் பாருவின் மசாயில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏப்ரல் 18 ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஏப்ரல் 19 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை அவர்கள் அனைவரும் அந்த குற்றங்களைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. எழுவருக்கு 16,000 ரிங்கிட் ஜாமீனும், மற்றொரு நபருக்கு 14,000 ரிங்கிட் ஜாமினும் அனுமதிக்கப்பட்டது. அவர்களுக்கு தண்டனை விதிப்பதற்கு ஜூன் 3ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது