கோலாலம்பூர், பிப் 3 – வர்த்தக மையங்களில் குவியும் வெளிநாட்டவர்களிடம் குடிநுழைவுத்துறை இனி திடீர் பரிசோதனையை நடத்தும். நேற்று தொடங்கிய அந்த நடவடிக்கையின்போது 50 பேரில் 40 பேர் தங்களது அடையாள ஆவணங்களை காட்டத் தவறினர். அவர்கள் அனைவருக்கும் எழுத்துப்பூர்வமான மற்றும் வாய்மொழி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறையின் இயக்குனர் வான் முகமட் சௌபீ வான் யூசோஃப் தெரிவித்தார்.
இத்தகைய பரிசோதனை அடிக்கடி வர்த்தக மையங்களில் நடைபெறும் . வெளிநாட்டவர்கள் குடிநுழைவு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதிசெய்யும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக வான் முகமட் கூறினார். சட்டவிரோத வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிகள் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கையிலிருந்து இனி தப்ப முடியாது என்றும் அவர்
எச்சரித்தார்.