Latestமலேசியா

தம்பினில், இரு கார்களை உட்படுத்திய விபத்து; 62 வயது பெண் பலி

தம்பின், ஜனவரி 8 – நெகிரி செம்பிலான், ஜாலான் கெமாஸ் – தம்பின் சாலையில், இரு கார்களை உட்படுத்திய சாலை விபத்தில், 62 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மாலை மணி 4.15 வாக்கில், அப்பெண் தனது பெரோடுவா வீவா காரில், கெமாஸிலிருந்து தாமான் செந்தோசா நோக்கி பயணமான போது அவ்விபத்து நிகழ்ந்தது.

எதிர் முனையிலிருந்து வந்து திடீரென அப்பெண் பயணித்த சாலையில் புகுந்த புரோட்டோன் பெசோனா காரை மோதி, அவர் விபத்துக்குள்ளானதாக, தம்பின் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அனுவால் அப்துல் வஹாப் தெரிவித்தார்.

அதனால் பலத்த காயங்களுக்கு இலக்கான அப்பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பலத்த காயங்களுக்கு இலக்கான 44 வயது பெசோனா ஓட்டுனர் செகாமாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவ்விபத்து, 1987-ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படும் வேளை ; தகவல் அறிந்த பொதுமக்கள் விசாரணைக்கு உதவ போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!